Wednesday, May 23, 2007

இறையே!

நாங்கள் புகழ் நிறைந்து வாழ வேண்டும்
எங்கள் மதிப்புக்கும் புகழுக்கும் கீழே
புனிதம் நிலவவேண்டும்.
நற்செயலால் கிட்டும் ஆன்மபலத்தால்
எங்கள் ஜீவசக்தி வளர வேண்டும்.
எங்கள் வாழ்வு ஒளிகொண்ட திசைகளாய்ப்
பரந்து விரிந்து ஒளிர்ந்து திகழவேண்டும்.
நலம்தரும் அக்கினிதேவதைகளே!
எம் எண்ணத்தில் சொல்லில் தேன்பொழிக!

- அதர்வண வேதம்.

No comments: